சத்தியத்தின் குரலாக...! சமுதாயத்தின செய்தியாக...!!

May 28, 2012

CBSE +2 தேர்வில் தேசிய அளவில் முஸ்லிம் மாணவன் முதலிடம்!

மே,28: CBSE +2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. இதில் மணிப்பூரைச் சேர்ந்த மாணவன் முஹம்மது இஸ்மத் 500க்கு 495 மதிப்பெண்கள் எடுத்து முதல் மாணவனாக தேர்வாகியுள்ளார்.

நாட்டில் உள்ள பாடத்திட்டங்களில் சிபி.எஸ்.இ பாடத்திட்டம் தான் சிறந்தது. சிபிஎஸ் பாடத்திட்டத்தின் கீழ் பிளஸ் டூ தேர்வு எழுதிவர்களின் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகியுள்ளது. இதில் 500க்கு 495 மதிப்பெண்கள் எடுத்து மணிப்பூரைச் சேர்ந்த மாணவன் முஹம்மது இஸ்மத் முதல் மாணவனாக தேர்வாகியுள்ளார்.

May 27, 2012

அதிமுக அரசின் ஓராண்டு சாதனை?

ஓராண்டுக்கு முன் நடந்த பொதுத் தேர்தல் அதிமுக கூட எதிர்பார்க்காத அளவுக்கு மாபெரும் வெற்றியை அதிமுக பெற்றது. ஜெயலலிதாவிடம் மாறுதல் ஏற்பட்டுவிட்டது என்று மக்கள் நம்பியது தவறு என்பதை அவர் தனது ஒவ்வொரு நடவடிக்கை மூலமும் காட்டி வருகிறார். மக்களின் மகத்தான ஆதரவைப் பெற்றுவிட்டோம்; நம்மை யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது என்ற எண்ணத்தில் கூட்டணிக் கட்சிகளைக்கூட மதிக்காமல் தான் நினைத்தைச் செய்து வருகிறார் ஜெயலலிதா.

May 24, 2012

அல்லாஹ்வை நினைவு கூறுவோம்!

கண்ணியமிக்க வல்ல நாயன் தன் திருமறையில் கூறுகிறான்: 

நம்பிக்கைக் கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன. (அல்குர்ஆன்: 13:28) 

இவ்வுலகில் பிறந்த அனைவரும் ஒருவர் மற்றவரை நினைக்கின்றனர். எதையாவது நினைக்காத உள்ளங்கள் இல்லை எனலாம். தன்னை நேசிப்பவர் களையோ தனக்கு விருப்பத்திற்குரிவர்களையோ குடும்பத்தினரையோ தொழில் முன்னேற்றம் அடைவதை பற்றியோ எதிர்காலத்தை பற்றியோ தன்னை விட்டு கடந்து போன தனக்கு வரவிருக்கின்ற இன்ப துன்பங்களைப் பற்றியோ அவர்களுடைய நினைவலைகள் நீண்டு கொண்டே செல்கின்றது.

May 21, 2012

மாநாடாக மாறிய கூத்தாநல்லூர் வரதட்சனை ஒழிப்புக் கூட்டம்!

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளையில் கடந்த 20-5-2012 அன்று மாபெரும் வரதட்சனை ஒழிப்பு பொதுகூட்டம் நடைபெற்றது.
இதில் மாநில தலைவர் பி.ஜைனுல் அபிதீன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

நாளை பிளஸ் 2 ரிசல்ட்

பரங்கிப்பேட்டை: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படுகின்றன. பரங்கிப்பேட்டை உள்பட தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மார்ச் 8-ம் தேதி துவங்கிய பிளஸ் 2 தேர்வுகள், 30ம் தேதி வரை நடந்தன. 2,000 மையங்களில் நடந்த இத்தேர்வை, 7 லட்சத்து 63 ஆயிரத்து 124 மாணவர்கள் எழுதினர். இவர்களில், 3 லட்சத்து 53 ஆயிரத்து 953 பேர் மாணவர்கள்; 4 லட்சத்து 9 ஆயிரத்து 171 பேர் மாணவியர். விடைத்தாள்கள் திருத்தும் பணிகள், 47 மையங்களில் நடந்து வந்தன. அனைத்து மையங்களிலும் பணிகள் முடிந்த நிலையில், பொதுத் தேர்வு முடிவுகள் நாளை (மே 22) காலை 11 மணிக்கு வெளியிடப்படுமென அறிவிக்கப்பட்டது.

May 19, 2012

கோடைகால பயிற்சி முகாம் நிறைவு மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி!

பரங்கிப்பேட்டை: அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக மாணவ, மாணவிகள் மற்றும் குடும்ப பெண்கள் பயன்பெறும் வகையில் “கோடைகால பயிற்சி முகாம்” 05.05.2012 முதல் 15.05.2012 வரை பத்து நாட்களாக மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளி இமாம் மெளலவி.அப்துல் மஜீத் உமரி அவர்களால் நடத்தப்பட்டது. இந்த முகாமில் 80-க்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!

May 14, 2012

தினத்தந்தியை ஒழித்துக் கட்ட இருமாத செயல்திட்டம்!

கடந்த 28.04.2012 சனிக்கிழமை அன்று "இதை கேட்பாரே இல்லையா?" என்ற தலைப்பில் தினத்தந்தியில் வெளியான தலையங்கம் முஸ்லிம்களை மிகுந்த கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது. தாங்கள் சங்பரிவாரக் கும்பலின் கைக்கூலிகள் தான் என்பதை தினத்தந்தி வெட்ட வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் அந்தத் தலையங்கம் அமைந்துள்ளது.

May 13, 2012

பரங்கிப்பேட்டையில் போஸ்டர் பரபரப்பு!

பரங்கிப்பேட்டை, 13: பரங்கிப்பேட்டையின் முக்கிய இடங்களில் ”பரங்கிப்பேட்டை பொதுமக்க”ள் என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்ட்டரால் ஊரில் பரபரப்பு!

நிலநடுக்கம் ஓர் ஏச்சரிக்கையா?

விஞ்ஞானம் அசுர வளர்ச்சி அடைந்துவரும் நேரத்தில் விஞ்ஞானிகளால் தடுக்கமுடியாத பெரும் சேதங்களும் உலகத்தில் நடக்கத்தான் செய்கின்றன.
விஞ்ஞான வளர்ச்சியில் உச்சத்தில் இருக்கும் ஜப்பான்அமெரிக்கா போன்ற நாடுகளிலும் கூட மிகப்பெரிய சேதங்கள் ஏற்படுகின்றன. சுனாமி போன்ற பேராபத்துகள் வளர்ச்சியடைந்த பெருநாடுகளைக்கூட விட்டுவைக்கவில்லை.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ”ஜுன் 4”

சென்னை:பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், ஜூன் 4ம் தேதி வெளியிடப்படும் என, பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி அறிவித்தார்.அவர் வெளியிட்ட அறிவிப்பில், ""ஏப்ரல் மாதம் நடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை, ஜூன் 4ம் தேதி, பிற்பகல் 1:30 மணிக்கு வெளியிட, முதல்வர் அனுமதி அளித்துள்ளார். அதன்படி, தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்,'' என, தெரிவித்துள்ளார்.

May 12, 2012

சிதம்பரத்தில் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம் ஒத்திவைப்பு!


சிதம்பரம்: சிதம்பரம் TNTJ மார்கஸ் மிக அருகில் உள்ள NO;2406 அரசு டாஸ்மார்க் கடை பொது மக்களுக்கும், வணக்க வழி பாட்டிற்கும், மாணவமாணவியர்களுக்கும் மிகவும் இடையுறாக இருந்து வருகின்றது. 

அண்ணா பல்கலைகழகத்தில் பொறியியல் சேர்க்கை ஆரம்பம்!


12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வரும் 22ஆம் தேதி வெளியாக இருக்கும் தருணத்தில் இளநிலை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப‌படிப்புகளுக்கான‌ சேர்க்கை அறிவிப்பை அண்ணா பல்கலைகழகம் வெளியிட்டுள்ளது.

இது குறித்து அண்ண பல்கலைகழக துணை வேந்தர் மண்ணர் ஜவகர் அவர்கள் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்

May 09, 2012

கோடை கால பயிற்சி முகாம்!

பரங்கிப்பேட்டை: அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக மாணவ, மாணவிகள் கோடை விடுமுறையை பயன்யுள்ள வகையில் அமைத்து கொள்ள “கோடை கால பயிற்சி முகாம்” கடந்த 05.05.2012 முதல் ஆரம்பிக்கப்பட்டு 15.05.2012 வரை 10 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறயிருகின்றது. (இன்ஷாஅல்லாஹ்)

பரங்கிப்பேட்டை வாழ் மக்களுக்கு...!

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை வாழ் மக்களுக்கு இஸ்லாமிய ஜக்கிய ஜமாஅத்தின் வேண்டுகோள்.


ஆராய்ச்சி படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கபடுகின்றன!


சென்னை தரமணியில் உள்ள Council of Scientific & Industrial Research -  CSIR  என்று கூறப்படும் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கூட்டமைப்பின் கட்டமைப்பு பொறியியல் ஆய்வு மையத்தில் பொறியியல் பிரிவில் ஆராய்ச்சி படிப்புக்கு (Ph.D ) விண்னப்பங்கள் வரவேற்கபடுகின்றன.

May 07, 2012

கொடிகட்டி பறக்குது நொறுக்குத் தீனி: குழந்தைகளைக் குண்டாக்கும் அபாயம்


ஆய்வுக்கு உட்படுத்தப்படாத வெளிநாட்டு உணவுகள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட நொறுக்குத் தீனிகள் விற்பனை, தமிழகத்தில், கொடிகட்டி பறந்து வருகிறது. குழந்தைகளைப் பெரிதும் பாதிக்கும் இதுபோன்ற உணவுகளைக் கட்டுப்படுத்த, அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற, எதிர்பார்ப்பு பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் கபளீகரம்: வளைக்கப்பட்ட வக்ஃப் நிலங்கள்!


கடலூர்: கடலூர் மாவட்டம் கடலூர் தாலுகாவில் உள்ளது செல்லஞ்சேரி என்ற கிராமம். புதவை மாநிலத்தின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள இந்த ஊர் தற்போது முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்டதாக இல்லை. இருப்பினும் ஒரு காலத்தில் அங்கு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வந்துள்ளனர்.

May 02, 2012

படகு குழாம் செயல்படுமா?

பரங்கிப்பேட்டையில் சுற்றுலா பயணிகளுக்காக ஏற்படுத்தப்பட்ட படகு குழாம் தற்போது செயல்படாமல் உள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைவதால் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


April 30, 2012

போக்குவரத்து இடையூறு: கச்சேரி தெரு நடைபாதை மாற்றியமைப்பு!

பரங்கிப்பேட்டை, ஏப்ரல் 30:  கச்சேரி தெருவில் அரசு மருத்துவமனை, வங்கிகள் இருப்பதால் மற்றும் வணிக வளாகங்கள் எப்போதும் இந்த சாலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும்.

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More